Saturday, January 30, 2010

சுட்டு விட்டார் காந்தியினை

தீண்டாமைக் கொடுமையினை இந்து மதம்
தீண்டாமல் தூக்கி உடன் எறிய வேண்டும்
வேண்டாத அக் கொடுமை இருக்கும் என்றால்
வேறு மதம் தீண்டாமை இல்லா மதம்
ஆண்டவரை வணங்குதற்கு அதிலே சேர்ந்து
அதனையே என் மதமாய் ஆக்கிக் கொள்வேன்
பூண்டார் இம்முடிவினையே காந்தி அண்ணல்
பொறுப்பாரா அதனால்தான் சுட்டு விட்டார்


வரதட்சணைக் கொடுமை ஒழிவதற்கு
வழி சொன்னார் அடிகள் இங்கு மிகத் தெளிவாய்
பிற சாதி தன்னில் மணம் கொண்டு விட்டால்
பிரச்சினைகள் தீர்வதுடன் சாதி தானும்
இறந்தொழியும் அதன் பின்னர் அனைவருமே
இந்தியர்கள் என்ற பெயர் கொண்டு வாழ்வோம்
சிறந்தோங்க வழி இதுதான் என்று சொன்னார்
சிறு மதியார் அதனால்தான் சுட்டு விட்டார்

0 மறுமொழிகள்: