Friday, January 1, 2010

குமரன் தாராய்

இருக்கின்ற நல்லவரும் இந்த நாட்டில்
ஏனோ தானோ வென்று இருப்பதாலே
பொறுக்கிகளும் தீயவரும் இந்த நாட்டில்
பொறுப்பினிலே தலைவர் என்று இருக்கின்றாரே
செருக்கடைந்து அவர் செய்யும் செயல்கள் கண்டால்
சிறுமை மிகச் சிறுமை மிகக் கொடுமையன்றோ
கிறுக்கர்களாய் சில மக்கள் வாழ்ந்து இந்தக்
கேவலங்கள் தன்னை யெல்லாம் வணங்குகின்றார்


பொறுக்குதில்லை என்று சொன்ன பாரதியின்
பொன் வரிகள் இன்றைக்கும் பொருத்தமன்றோ
குறுக்கு வழித் தலைவர்களின் கொட்டம் கண்டும்
கோபமின்றி மானமின்றி வாழுகின்றோம்
அறுத்து நின்றார் நல்லதெல்லாம் என்ற போதும்
அவர் குறித்துப் பேசுவதே யில்லை அய்யோ
நெருக்கி உன்னை வேண்டுகின்றேன் சிவனே நாதா
நெற்றிக் கண் திறந்து ஒரு குமரன் தாராய்

0 மறுமொழிகள்: