Wednesday, January 27, 2010

சூழ் கலி என்றால்

உலகுக்குவழி காட்டும் ஒரு நாட்டில் பிறந்தோம்
ஒருவருக்கு ஒருவர் பல பேதங்களை வளர்த்தோம்
பலருக்கு வழி காட்டும் பண்புகளை எல்லாம்
பாவிகளாய்ப் பதவிகட்காய் பறித்து விட்டார் தலைவர்
சிலருக்கு வாழ்வு அது சீரழிந்த வாழ்வு
சில்லறைக்காய்த் தன்மானம் விற்று விட்ட வாழ்வு
அழகுக்காய் கற்பை விற்ற அரசியலார் வாழ்வு
அவ் வாழ்வால் நம் வாழ்வை இழந்து விட்டோம் பாரீர்


நாணமென்ற பண்பிற்கே நாணம் வர வைத்தார்
நமையாள நாம் தேர்ந்த நம்முடைய தலைவர்
பேணுகின்றார் தம் குடும்பம் பிள்ளைகளையெல்லாம்
பேதலித்து நிற்கின்ற ஏழையரின் கூட்டம்
வாழ்வதற்கு வழி எதுவும் வகுத்தெடுக்கவில்லை
வயிற்றுக்குச் சோறிட்டு வாக்குகளைப் பெறுவார்
சூழ் கலி என்றால் இதுதான் என்று நாமும் நம்மை
சுத்தமாகச் சமாதானம் செய்து கொண்டு வாழ்வோம்

0 மறுமொழிகள்: