Tuesday, January 19, 2010

வாரீர்

அனைவருமா தீயவர்கள் அன்னை நாட்டில்
ஐந்தேசத வீதம்தான் தீயவர்கள்
தனைக் காக்கும் அரசியலார் துணையினோடு
தாய் நாட்டைச் சுரண்டுவதே இவர்கள் வேலை
தினைத் துணையும் உண்மையில்லா இவர்கள் தன்னை
தேச மக்கள் அனைவருமே சேர்ந் தெதிர்த்தால்
நினைத்த நல்ல வழிகளிலே தாயாம் நாட்டை
நிமிர்ந்து நடை போட வைக்க முடியும் வாரீர்

3 மறுமொழிகள்:

said...

//நினைத்த நல்ல வழிகளிலே தாயாம் நாட்டை
நிமிர்ந்து நடை போட வைக்க முடியும் வாரீர்//

நிச்சயம் முடியும்....

மனதைக்கவரும் வரிகள்...

said...

May be generally true.But in tamilnadu 35% of people are DMK supporters who are by nature most corrupt and evil people.

said...

உண்மைதான் - ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார் ?

அன்புடன்
இராமச்சந்திரன்