Saturday, January 30, 2010

குமரப்பா

குமரப்பா காந்தியவர் கொள்கையினை
கொண்டிருந்தார் இறுதி வரை உயிர் மூச்சாக
தமரப்பா ஏழையர்க்கும் இந்தியர்க்கும்
தறி கிராமத் தொழில் வழியே வாழ்வதுவே
அமரப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்
அற வழி என்றுரைத்து நின்ற அன்பரப்பா
எவர் கேட்டார் அதனால் தான் இந்தியாவை
எவர் எவர்க்கோ சந்தையென ஆக்கி விட்டார்

0 மறுமொழிகள்: