Tuesday, January 19, 2010

காறித் துப்பும்

உண்மை சொல்ல முடியாராய் அஞ்சுகின்றார்
ஊமைகளைப் போல பலர் துஞ்சுகின்றார்
நன்மை செய்ய வேண்டியவர் கெஞ்சுகின்றார்
நாட்டு நிலை நினைத்துப் பலர் வெம்புகின்றார்
தன்மை இதை மாற்றுதற்கு கற்றோர் எல்லாம்
தாய் நாட்டு உணர்வோடு வருதல் வேண்டும்
புன்மை இதை நீக்காமல் போனோம் என்றால்
போ போ என் றெதிர்காலம் காறித் துப்பும்

0 மறுமொழிகள்: