Monday, February 1, 2010

சாம்பலாய் ஆகிடும்

சாகப் பிறந்தவர் தப்பிட வழியில்லை
சரித்திரம் படைத்தவர் செத்திட வழியில்லை
ஆகப் பிறந்தவர் அழிந்திட வழியில்லை
ஆட்டிப் படைப்பவர் வாழ்ந்திடல் சரியில்லை
ஏகன் அநேகனாய் இருந்திடும் இறைவனை
ஏய்க்க நினைப்பவர் எதிர்காலம் தனிலில்லை
வாகான கொள்ளைகள் அரசியல் திருட்டுக்கள்
வறியவர் தீயிலே சாம்பலாய் ஆகிடும்

0 மறுமொழிகள்: