Sunday, February 14, 2010

தெய்வம் வாழ்த்தும்

தாயினைத் தந்தை தன்னை தம்பியை அண்ணன் தன்னை
சேயென அன்பு செய்யும் தங்கையைத் தமக்கைதன்னை
வாயினில் பல்லேயின்றி வாஞ்சையை அள்ளி வீசும்
தூயராம் தாததா பாட்டி தொடரும் நல் உறவினோடு
காய்தலே இல்லா கன்னித் தமிழரைத் தாய் நாட்டாரை
ஒய்தலே இல்லா இந்த உலகத்து மக்கள் தம்மை
தோய்ந்திங்கு காதல் செய்தால் தொடரும் நல் நன்மையெல்லாம்
வாய்மைதான் காதல் அதனை வணங்கிடும் தெய்வம் வாழ்த்தும்

0 மறுமொழிகள்: