Tuesday, February 9, 2010

தன் குடும்பம் காக்கின்ற ஒரு தலைவர்
தனிக் குடும்பம் ஒன்றிற்காய் ஒரு தலைவி
நம் குடும்பம் காப்பதற்காய் வாக்குத் தந்தால்
நாம் அதனை விற்பதற்கோ நாணவில்லை
தன் குடும்பம் தனைத் துறந்து தாய் நாட்டிற்காய்
தடியடியும் சிறை வாழ்வும் பெற்றழிந்த
நற் குடும்பம் பல இங்கு தெருவினிலே
நாதியற்றுப் போனோமே சொடலமாடா

1 மறுமொழிகள்:

said...

தமிழ்த் திரு நாடு இப்படி வெங்காய திராவிட தலைவர்களால் சீரழிவதை காணும் தியாகிகளின் உள்ளம் பதை பதைப்பதை சொல்லும் இந்த கவிதை கண்ணிரை வர வைத்தது.