Sunday, February 21, 2010

காடு வாழ

புலிகளினைக் காப்பதற்காய்க் கணக்கெடுப்பாம்
புத்தியின்றி நடக்கின்ற அரசாங்கங்கள்
வலியவர்கள் சேர்க்கின்ற பணத்தைப் பார்த்து
வறியவர்கள் ஆசை கொள்ள காட்டிற்குள்ளே
புலியல்ல சிங்கமல்ல யானையென்று
பொறுப்பின்றிக் கொல்லுகின்றார் பணத்திற்காக
மலிவாக அதைக் கூட வாங்குகின்றார்
மானமில்லா அரசியலார் அவரைக் காத்து


வளம் சேர்த்து நாடு காக்கும் அரசியலில்
வலியின்றிப் பொருள் சேர்க்கும் நாணமற்றார்
உளம் விற்று மக்களது நலத்தை விற்று
ஊர் முழுக்க சொத்துக்கள் வாங்குகின்றார்
தளம் அவர்தான் நடக்கின்ற தவறுக் கெல்லாம்
தனையறியா ஏழைகளோ விலை போகின்றார்
வலம் வந்து இவரையும் வணங்கி நிற்கும்
வறுமையினை யார் ஒழிப்பார் காடு வாழ

0 மறுமொழிகள்: