Saturday, February 27, 2010

சின்னப் புத்தி

விழாக்களுக்குப் பஞ்சமில்லை ஏழைகள் தான்
விலை வாசி ஏறியதாய்ப் புலம்புகின்றார்
விழாக் கண்டு சகிக்காத வீணர்கள்தான்
விலைவாசி நிலை சொல்லி ஆடுகின்றார்
விழா என்றால் இது அன்றோ விழா முன்னர்
விழாக்கள் நீர் இது போல பார்த்த துண்டோ
விழாக் கண்டு மகிழ்ச்சி கொள்ளல் விட்டூ விட்டு
விலை வாசி தன்னைப் பேசல் சின்னப் புத்தி

0 மறுமொழிகள்: