Friday, February 12, 2010

சிவராத்திரி


உவமையில்லா இறைவன் அவன் தன்னை என்றும்
உளமார வணங்கிடுங்கள் சிவனேயென்று
தவமிருந்து தேடி ஒன்றும் அலைய வேண்டாம்
தாயாக அவன் வந்து தழுவிக் கொள்வான்
புவனமிதில் அவன் தந்த பிறப்பைப் போற்றி
பொழுதெல்லாம் நன்மை ஒன்றே செய்திடுங்கள்
கவலைகளைத் தீமைகளை அருளிச் செய்தான்
கண்ணுதலான் நமை நன்கு மேம்படுத்த

0 மறுமொழிகள்: