Wednesday, February 10, 2010

மயங்குகின்றார்

ஆட்சி எனில் அச்சம் கொண்டார் அன்று நம்மை
ஆண்டிருந்த தமிழ் மன்னர் மக்களையே
சாட்சி எனக் கொண்டு அவர் ஆட்சி செய்தார்
சரியாக இருந்ததந்த ஆட்சியெல்லாம்
ஆட்சி மக்கள் கையில் என்று சொல்லுகின்றார்
ஆனாலும் மக்கள் அதை உணர்ந்தார் இல்லை
காட்சிகளில் இலவசத்தில் மயங்கி இன்று
கண்ணியமே இல்லாரை வணங்குகின்றார்

0 மறுமொழிகள்: