Thursday, May 7, 2009

என்றும் வாழ்வார்

மாசில்லா மனத்தோடு வாழ்ந்தாரென்றால்
மறந்தும் அங்கே பொய்யில்லை புரட்டும் இல்லை
தூசு கொண்ட மனத்தோடு வாழ்ந்தாரென்றால்
துன்பம் தரும் பொய் புரட்டே அவரின் எல்லை
காசு மட்டும் வாழ்க்கை என்று வாழ்வாரெல்லாம்
கயமை பொய்மை புன்மை என்றே வாழ்ந்திடுவார்
தேசு புகழ் கொள்வார்கள் எல்லாம் உண்மைத்
தெய்வம் அதை உணர்ந்தாராய் என்றும் வாழ்வார்

0 மறுமொழிகள்: