Saturday, May 9, 2009

அறிவீர் நீரே

கும்பிட்டு விழுகின்றார் அனைவரையும்
கூப்பிட்டுக் கூப்பிட்டு வணங்குகின்றார்
எம்புட்டு வேணுமோ துட்டுத் தர
ஏற்பாடு உள்ளததைச் சொல்லுகின்றார்
நம்பிட்டு வாக்குக்களை அளிக்கச் சொல்லி
நாய் போல அலைகின்றார் வெயிலில் இங்கு
அம்புட்டுத்தான் தேர்தல் முடிஞ்ச பின்னே
அவர் யாரோ நாம் யாரோ அறிவீர் நீரே

0 மறுமொழிகள்: