Monday, May 25, 2009

குரான் கருத்து

வாழ்நாளை நீ வாழ்ந்த வழியைச் சொல்லு
வளம் சேர்த்த வழிகளினைச் சொல்லி நில்லு
சூழ்ந்த செல்வம் செலவான வழியைச் சொல்லு
சுக இளமைக் காலத்தின் வாழ்வைச் சொல்லு
தேர்வான உன் அறிவால் மனித வாழ்வில்
தேர்ந்தெடுத்து நீ செய்த செயல்கள் சொல்லு
ஒர்ந்து இதனைச் சொல்லாமல் இறைவன் அவன்
உயர் நீதி மன்றம் விட்டு விலகொணாது

0 மறுமொழிகள்: