Wednesday, May 6, 2009

உணர்வீர் நீரே

உண்மையினை யாரேனும் பேசி விட்டால்
உடனேயே பதறுகின்றார் அய்யோ என்று
நன்மை அது என்பதனால் நடுங்குகின்றார்
நலம் எண்ணார் உடனேயே கலங்குகின்றார்
எண்ணமெல்லாம் நல்லனவே என்று வாழ்வோர்
இதயத்தால் வாழ்த்துகின்றார் மகிழுகின்றார்
உண்மை அது ஒன்றேதான் என்றும் எங்கும்
உலகத்தை வெற்றி கொள்ளும் உணர்வீர் நீரே

0 மறுமொழிகள்: