Tuesday, May 12, 2009

வாழ்வதனால் பதினெண் கீழ்க் கணக்கு கணிமேதாவியார்

எண்ணஞ் சிறியாராய் இருப்பாரை நெருங்காமல்
புண்ணென்னும் உணர்வோடு புலால் தன்னை உண்ணாமல்
வண்ணப் பொய்களையே வாழ்க்கையிலே கொள்ளாமல்
வடிவாக அடுத்தவரின் பொருள்களையே திருடாமல்
எண்ணமெல்லாம் அடுத்தவர்க்கு ஈவதென்று பெருமை கொண்டு
இதயத்தைக் கல்லாக இறுக்காமல் வாழ்பவர்க்கு
பன்னரும் அற நூல்கள் பைந்தமிழில் உள்ளதெல்லாம்
பயனாக ஆகாது அற வாழ்க்கை வாழ்வதனால்


ஏலாதி


குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால் பொய்
மறுகான் பிறர் பொருள் வெளவான் - இறுகானாய்
ஈடுஅற் றவர்க்குஈவா னாயின் நெறிநூல்கள்
பாடிறப்ப பன்னும் இடத்து

0 மறுமொழிகள்: