Tuesday, May 12, 2009

மறக்க வேண்டாம்

யார் யாருக்கு ஆதரவு புரியவில்லை
யாரோடு யார் இருப்பார் தெரியவில்லை
ஊர் முழுக்கச் சத்தமிட்டு சுற்றி வந்தார்
ஒய்வெடுக்க மாட்டாமல் திணருகின்றார்
சீர் கெடுத்தார் யாரென்று தெரியாராகி
சிந்திக்க முடியாமல் மக்கள் நின்றார்
கார் தந்து வான்மழையைத் தரும் இறையே
காப்பாற்றல் உன் கடமை மறக்க வேண்டாம்

0 மறுமொழிகள்: