Thursday, May 28, 2009

ராகுல் காந்தி

வெள்ளுடை வெள்ளுள்ளம் வெண் சிரிப்பு
விரிவான நற்குணங்கள் பட்டறிவு
கொள்ளை கொள்ளும் அழகு முகம் வஞ்சகத்தின்
கூட்டில்லை என்று எங்கும் காட்டி நிற்கும்
நல்லவனாய் வல்லவனாய் இளைய மகன்
நாடு காக்க வந்துள்ளான் ராகுல் ராகுல்
சொல்கையிலே நாவினிக்க உளம் களிக்க
சொல்லுகின்றோம் இளைய மகன் வாழ்க வாழ்க



பதவிகளைப் பெறுவதற்காய்ப் பல்லிளித்து
பரிதவித்துச் சொல்லிழந்து துடி துடித்துக்
கரவு மனம் தனை மறைத்து நல்லோர் போல
கவிதை சொல்லி ஏமாற்றும் தீயோர் முன்னே
உதவி செய்ய வந்தேன் நான் ஏழைக்காக
உயர் இயக்கம் நாடு காக்க என்றே வந்தேன்
பதவி யெதும் வேண்டாப் பணி செய்ய வந்தேன்
பண்பு நிறை ராகுல் சொன்னார் வாழ்க என்றும்

0 மறுமொழிகள்: