Friday, May 22, 2009

வேடம் என்று

தமிழுக்காய் உயிர் கொடுப்பேன் என்று சிலர்
தம்பட்டம் அடிக்கின்றார் பல நாட்களாய்
உமிழ் நீரைக் கூட இவர் பிறருக் கென்று
உதவிடவே மாட்டார்கள் பேச்சு பேச்சு
கமழ் தமிழைக் காப்பாற்ற இவரையன்றி
கனித் தமிழர் யாரும் இல்லை என்றும் சொல்வார்
தமிழுக்கு இவர் தம்மைத் தெரியும் இவர்
தமைக் காக்கப் போடுகின்ற வேடம் என்று

1 மறுமொழிகள்:

said...

தாருக்கே தோள்வளர்த்துத் தாய்தமிழ்க்கே என்றுரைப்பார்
பேருக்கே பல்லோர் பிறந்து!

சொற்பொருள்;- தார் -மாலை