Tuesday, May 19, 2009

அனைவருமே ஊமையானார்

இறந்தவர்க்காய் அழுவதுவும் அவருக்காக
இருப்பதுவே தான் என்று புலம்புவதும்
நிரந்தரமாய்த் தமிழர்களின் நடிப்பு இதை
நினையாமல் அனைவரையும் போற்றி நின்றோர்
உளம் துடிக்க இன்று அதைப் புரிந்து கொண்டு
உணர்வாலே துடிக்கின்றார் அய்யோ அய்யோ
களம் காணா வீரர்களைப் போலிகளை
கண்ட பின்னர் அழுகின்றார் என்ன செய்ய


ஊராரின் பிள்ளைகளைத் தீயிலிட்டு
உணர்ச்சி பொங்க அது குறித்து உரை நிகழ்த்தி
சீராய்த் தன் பிள்ளைகளை பத்திரமாய்ச்
சீமானின் பிள்ளைகளாய் வளர்த்திடுவார்
ஆரேனும் தன் பிள்ளை தமிழுக்காக
அழிவதற்காய்க் கொடுத்தாரா இல்லை இல்லை
ஊராரே நீண்ட நாள் நாடகங்கள்
உணர்ந்தார்கள் அனைவருமே ஊமையானார்

0 மறுமொழிகள்: