Sunday, May 10, 2009

சேர்ப்பது எதற்கு

வங்கிகள் தோறும் பணத்தைச் சேர்த்து
வடிவாய் நிறைய வீடுகள் வாங்கி
தங்களுக்கென்று பல விதமாக
தனித் தனியாக பலவும் சேர்த்து
எங்கு பார்த்தாலும் கடவுள் என்று
இயம்பி நிற்பாரை ஒன்று கேட்பேன்
அங்கவன் தன்னை நம்புவதென்றால்
அடுக் கடுகாகச் சேர்ப்பது எதற்கு

0 மறுமொழிகள்: