Thursday, March 11, 2010

ஒழிந்தோம் நாமே

கலைகளினைக் காப்பதிலும் கோயில்களின்
கண்ணியத்தைக் காப்பதிலும் தம் பெருமை
நிலைகளினைக் காப்பதிலும் கேரளத்தார்
நிமிர்ந்து நிற்றல் பார்க்கின்றேன் நடிகரெல்லாம்
விலை மதிப்பேயில்லாத வேட்டியில் தான்
வெளியினிலே வருகின்றார் எழுதுவோரோ
நிலை குலைவதில்லை எந்த நிலையிலுமே
நிமிர்ந்து நின்று விருதுகளை மறுக்கின்றார் காண்


உலகினிலே முதல் மொழியாம் தமிழ் மொழியின்
உயர்ந்த கலைச் செல்வங்கள் போற்றினோமா
பல விதத்துக் கலைகளுக்கு பண்பினுக்கு
பயிற்றும் களம் கோயில்களை காத்துளோமோ
சிலை வடித்தோம் தலைவருக்கு அதனைக் கூட
சீரழியத் தெருவினிலே நிறுத்தினோமே
கலைகளெல்லாம் குத்தாட்டம் திரைப் படமென்று
கண்ணியமேயில்லாமல் ஒழிந்தோம் நாமே

0 மறுமொழிகள்: