Tuesday, March 2, 2010

கேவலங்கள்

எழுதிப் பார்த்தார் ஒய்ந்தே போனார்
எவர்தான் இங்கு உணருகின்றார்
பழுதாய் வாழும் வாழ்க்கை தன்னை
பழகிச் சுகங்கள் காணுகின்றார்
அழுதார் இங்கு அழவே வாழ்ந்தார்
அவரை யார் தான் நினைக்கின்றார்
கழுதை போலக் கோடிகள் சுமப்பார்
கவலை யற்ற கேவலங்கள்

0 மறுமொழிகள்: