Tuesday, March 23, 2010

சாமி மரம் மிருகம்

சாமிக்கு ஒரு மரம் மிருகம் என் றன்னிக்கே
சரியாக வைத்திருந்தார் நமது முன்னோர்
பூமிக்கு அது எல்லாம் தேவை என் றவர்களும்
பொறுப்பாக உணர்ந்ததால் செய்து வைத்தார்
நாமிங்கே அதையெல்லாம் மூடத்தனம் என்று
நாவாலே அடித்தடித் தொழித்துவிட்டோம்
பூமியைக் காப்பாத்த அதுவெல்லாம் வேணும்ன்னு
புலம்புறோம் இன்னிக்கு அனைவருமே

0 மறுமொழிகள்: