Tuesday, March 9, 2010

சண்டையிட்டு அழிய மாட்டார்

அவரின் மதம் அவர்க் கதனைப் பழிக்க வேண்டாம்
அன்பு செய்வீர் என்று சொன்னார் நபி பெருமான்
புவனமெல்லாம் புரிந்துணர்ந்த இறைவன் தூதர்
பொறுமைகளின் சிகரம் அவர் நேர்மைச் செல்வர்
நவம் இதனை நம்முடைய நம்மாழ்வாரும்
நலம் பயக்கும் பாசுரத்தில் சொல்லிச் சென்றார்
தவம் உணர்ந்தோர் உணர்வார்கள் இதனை எல்லாம்
தவறாகச் சண்டையிட்டு அழிய மாட்டார்

0 மறுமொழிகள்: