Wednesday, March 3, 2010

மனித வழி

பாதாம் பிஸ்தாவோடு குங்குமப் பூ
பக்குவமாய்க் கலந்திட்ட பாலருந்தி
தோதாக வாழுகின்ற சாமியார்கள்
துறவிய ரென்றெண்ணுகின்ற மூடத் தனம்
ஏனோ தமிழ் நாட்டில் அதிகமாக
ஏமாந்து பல பேரும் வணங்குகின்றார்
வானோர்க்கும் வழி காட்டும் வள்ளுவரை
வணங்குங்கள் அவர் வழியே மனித வழி

0 மறுமொழிகள்: