Friday, March 26, 2010

அங்கொரு சாமியார்

அங்கொரு சாமியார் இங்கொரு சாமியார்
ஆட்டங்கள் பாட்டங்கள் கூத்துக்கள் ஆயிரம்
பொங்கிய சோத்தைத்தான் எல்லாரும் திங்கிறார்
போதாக்குறைக்கு பால் பழங்களும் நொங்கிறார்
சங்கிலியாய் இந்த வேலைகள் தொடருது
சரியில்லா ஆட்களே இவர்களை வணங்குறார்
எங்கேயும் இவர்களை எதிர்த்து நின்றால் தான்
இறைவனும் நம்மையே ஏற்று நிற்பார் காண்

0 மறுமொழிகள்: