Wednesday, March 3, 2010

கொடுமை

பள பளக்கும் மகிழூந்துப் பயணம் சாமி
படுப்பதற்கோ அழுந்தி எழும் படுக்கை
வள வளவென் றுளறி நிற்கும் சாமி தம்மை
வணங்கி நிற்க பணம் படைத்த கொடியர்
உளம் இழந்த ஏழை கட்கோ துன்பம்
ஒழித்து விட வேண்டும் ஒரு வழி தான்
களம் இதனால் காமுகர்கள் எல்லாம்
காவிக்குள் நுழைகின்ற கொடுமை

0 மறுமொழிகள்: