Friday, March 26, 2010

அவர்களும் இவர்களும் ஒன்றன்றோ

இயல்பான வாழ்க்கையா இல்லறம் என்றுதான்
என்றைக்கோ வள்ளுவர் சொல்லித்தான் சென்றாரே
அயல் நாட்டார் பணங்களை அள்ளியே வாழ்ந்திட
ஆன்மீக வழி என்று ஆட்டங்கள் போடுறார்
தயங்காமல் இவர்களைத் தண்டிக்க வேண்டுமே
தறுதலைத் தலைவர்கள் செய்வாரோ மாட்டாரோ
கயமையில் அவர்களும் இவர்களும் ஒன்றன்றோ
காப்பாற்ற வேண்டும் நம் கடவுளே நம்மையே

0 மறுமொழிகள்: