Tuesday, March 9, 2010

வர மாட்டியா

ஊரெல்லாம் ஏய்க்கின்றார் ஏய்த்து விட்டு
உலக மறை திருக்குறளை இயம்புகின்றார்
சீரெல்லாம் குலைக்கின்றார் குலைத்து விட்டு
சிலம்பதனின் பெருமைகளைப் பேசுகின்றார்
நீரின்றித் தவிக்கின்ற ஏழையர்க்கோ
நிலை குலைய மதுவினையே வழங்குகின்றார்
யார் கேட்பார் இவர்களையே சொடலமாடா
எங்கிட்டு நீ ஒழிஞ்ச வர மாட்டீயா

0 மறுமொழிகள்: