Tuesday, March 23, 2010

நியாயம் காப்பீர்

சிவனவனோ பாதியினைத் தந்துயர்ந்தான்
திருமால் தன் மார்பினிலே இடமளித்தான்
நவம் நவமாய் நல்ல சொல் சொல்லுதற்கு
நாவினிலே கலைமகளை பிரம்மன் வைத்தான்
தவம் போல இதையெல்லாம் சொல்லி நிற்பீர்
தர மாட்டீர் சரி பாதி பெண்களுக்கு
அவமானம் இது என்று உணரா நீவீர்
அரசியலில் எவ்வாறு நியாயம் காப்பீர்

0 மறுமொழிகள்: