Tuesday, March 2, 2010

தான் ஒழிவார்

எல்லாப் புகழும் இறைவனுக் கென்று
எவர் உணர்ந்தாரோ அவர் வாழ்ந்தார்
எல்லாம் தானே என்ற ழிவோர்கள்
இருக்கும் வரையில் தான் தெரிவார்
வல்லான் அவனே என் றுணர்ந்தாரே
வாழ்வார் வாழ்வார் வாழ்க்கையினை
எல்லாம் தானென் றாடிடுவோரோ
இழிந்தும் அழிந்தும் தான் ஒழிவார்

0 மறுமொழிகள்: