Wednesday, March 24, 2010

மக்களையே ஏய்ப்பதிலே

வெட்கமில்லை என்று சொன்னார் புதுச்சேரியார்
வீழ்ந்து பட்ட பெண்ணினத்தைக் காப்பதற்காய்
வெட்கமில்லை என்றே இங்கு நாமும் சொன்னோம்
வீழ்ந்தொழியும் மக்களாட்சித் தேர்தல் தன்னை
தக்க வைத்துக் கொள்ள மட்டும் முயல்கின்றார் காண்
தரமின்றிச் சேர்த்த கோடி தனையே நம்பி
மக்களையே ஏய்ப்பதிலே இவருக் கிணை
மாநிலத்தில் எங்கேனும் உண்டோ சொல்வீர்

1 மறுமொழிகள்:

Anonymous said...

அருமையாக சொன்னீர்கள் அய்யா...