Monday, March 22, 2010

செல்வநாயகி என்றோர் பெண்ணார்

செல்வ நாயகி என்றோர் பெண்ணார்
சிறப்பாய்த் தமிழில் எழுதுகின்றார்
வல்லமை கொண்ட நல்லெழுத்து அவர்
வடிக்கும் யாவும் மெய்யெழுத்து
உள்ளத்துள்ளது எழுத்தாய் மாறும்
உயர்வு அதிலே தெரிகிறது
உயர உயர அவரின் எழுத்தால்
உண்மைத் தமிழும் உயர்கிறது

0 மறுமொழிகள்: