Monday, March 22, 2010

சுப்பு ஆறுமுகம்

வில்லிசையை அழியாமல் இன்றும் காக்கும்
வீரர் இவர் எம் அண்ணன் நெல்லை யூரார்
சொல்லிசைப்பில் இவரைப் போல் தமிழில் வல்லார்
சொல்லி விட ஒன்றிரண்டு பேரே உள்ளார்
நல்லிசையாய் வில்லிசையை இவரே பல
நாடுகளில் தந்துள்ளார் காந்தி என்னும்
மெல்லிசையை நல்லிசையை வில்லிசையில்
மேன்மை பெறத் தந்த சுப்பு ஆறுமுகம்

0 மறுமொழிகள்: