Saturday, April 12, 2008

இன்றைய கவிதை காவேரி

      பெருகி  வரும்  காவேரியைத்  தடுப்பதற்கு

            பெரியவர்கள்  யர்ருக்கும் வலிமையுண்டோ

      அருகி  வரும் மனிதப்பண்  பற்றவரால்

           ஆகி வரும்  கேடன்றோ  இவைக ளெல்லாம்

     உருகி நின்று  மொழி  பேசும்  மனிதர்களே

           உயிர்  வாழ்க்கை  எத்தனை  நாள் உணர்வீரோ  நீர்

     பருகி நிற்கும்  நீர்  இங்கே இயற்கை  அன்னை

           பரிந்தளித்த  கொடையன்றோ  அறியீரோ நீர்


     மொழி  தேர்ந்தும்  மதம்   தேர்ந்தும்  நாடு தேர்ந்தும்

           முறையாக  வந்தா  நீர்   பிறந்தீர்  இங்கு

     பழி    தேடிக  கொள்கின்றீர்   மனிதரென்றால்

           ப்ண்போடு  வாழ்தல்  என்று  மறந்தே போனீர்

     கழி  பேருவகை  யொடு   கன்னடத்தான்  

          கனித்தமிழான்  என்றெல்லாம்  ஆடுகின்றீர்

     வழி  உண்டு  அன்போடு  வாழுதற்கு

          வாழுங்கள்  இல்லையென்றால் ஒழிந்தே  போவீர்

10 மறுமொழிகள்:

said...

ஆஹா...கவிதை அற்புதமாக இருக்கிறது. உங்கள் தமிழுக்கு இதெல்லாம் சாதாரணம்.! ஆனால் எங்களுக்கு இதுதான் அசாதாரணம்!

கலக்குங்கள் அய்யா!

said...

நல்லா இருக்கு :))

said...

நன்றி சுரேகா வாழ்க தமிழுடன்

கணிப்பொறியில் உட்கார்ந்து கொண்டு
எழுதிய கவிதை.நேற்றிலிருந்தல்ல
எப்போதும் கவிதைகளை அப்படித்
தான் எழுதிப் பழக்கம்.

என்றும் உங்கள் அன்பை நாடும்

நெல்லை கண்ணன்

said...

வணக்கம் ஆயில்யன் வாழ்க தமிழுடன்.உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.தமிழுக்காக வாழும் எனக்கு தங்களைப் போன்றோரின் அன்பே
உயிர் மூச்சு.என்றும் நன்றியுடன்.

தங்கள் அன்பையே நாடும்

நெல்லை கண்ணன்

said...

Maranthu pona manitha neyathaiyum manathin varuthathiyum mani maniyaha solli irukkeenteergal iyya?

madiyum manitha neyam mannil vaalum iyya verene ungalai pontravrgal iruppathal

anbudan
a.j.rajaseker
arivippalar
hello fm
nellai

said...

வணக்கம் திரு. நெல்லை கண்ணன் அவர்களே !

வலைத்திரட்டில் உங்களைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வளமான சொற்களாலும், சிந்தனைகளாலும் உங்களது கவிதைகள் எங்களை ஆளுகின்றன. உங்களின் கவிதைகளைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி!
சென்னை கலைவானர் அரங்கில் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு " நிகழ்ச்சிக்காக, நள்ளிரவு சரியாக 12.00 மணிக்கு உங்கள் முன்னால், 3 நிமிடங்கள் பேசி, உங்களால் தேர்வு செய்யப்படாதவன் நான் என்பதையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இங்ஙனம்
உழவன்
http://tamizhodu.blogspot.com

said...

வணக்கம்.இராஜசேகர்வாழ்க
தமிழுடன்.
தங்களின் பாராட்டிற்கு ந்ன்றி.

தங்கள் அன்பை என்றும் நாடும்

நெல்லை கண்ணன்

said...

அன்புள்ள உழவன் அவர்களுக்கு
வணக்கம்.வாழ்க தமிழுடன்.எனது
மனமார்ந்த நன்றி தொடர்ந்து
தளத்தைப் பாருங்கள்.

என்றும் தங்கள் அன்பை விரும்பும்

நெல்லை கண்ணன்

said...

அறிவம் இவனை

கல்யாண்ஜி

குளம் பெருகி மறுகாலே போகும

இந்தக்

கோடை மழைக் காலத்தில் தமிழே

உந்தன்

வளம் பெருக்கி நிற்கின்றான் நெல்லை

கண்ணன்

வாழ்க தமிழ் உடன் என்னும் வேதம்

ஒதி

தளம் இணையம் வழி தினமும்,வாசல்

தோறும்

தமிழ்க் கோலம் இழைக்கின்றான் காணு

வீரேல்

உளம் நிறையும் மனவீதி தோறும்

நித்தம்

ஒடி வரும் ஞானத் தேர் அச்சம்

தீர்ந்து

களம் புகுமோர் வீரம் வரும்,நெஞ்சுக்

குள்ளே

கனல் பெருகும்,புவி மீதில் எவர்க்கும்

அஞ்சா

இளம் பருவம் மீண்டும் வரும்,வீறு

கொள்ளும்

இதயத்தில் புது ரத்தம் பாயும்,

உப்பின்

அளம் என்னில் கரிக்கத்தான் செய்யும்

இந்த

ஆழ்ந்த தமிழ்க் கடலலையோ
இனிப்பில் துள்ளும்

கிளம்புகவே இது காறும் கற்றோம்

இல்லை

கேட்பதனால் அறிவம் என இவனைக்

கேட்போம்

பெருமாள்புரம்
12/04/2008 கல்யாண்ஜி

said...

Vanakkam.
Enathu Anbu Vazhthukkal.