Saturday, June 21, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

நீராடுகின்றார் பெண்கள் நெருங்கி தம் அன்பரோடு
போராட்டம் அல்ல நல்ல பூவாட்டம் ஆட்டம் ஆட்டம்
சீரான இசையே பேச்சாய் சிறப்புற வழங்கும் பெண்ணாள்
சிவந்த நல் இதழோ   பவளம் தாமரைசேர்ந்த ஒன்றாம்
கூரான வாளும் நல்ல குவளையும் சேர்ந்த கண்கள்
ஆருமே இல்லையென்னும் கரும்பெனும் இடையாம் அந்தச்
சீமாட்டி கேட்டாள் உள்ளம் சீராட்டும் காதலானை
நீராட்டுக்குள்ளே கம்பன் நீராட்டும் அழகுச்செய்தி


கயலெனக் கண்கள் கொண்டாள் கயல்களை நீரில் கண்டாள்
கண்களால் கொண்ட கொன்ற காதலன் தன்னைக் கேட்டாள்
புயலெனச் சொல்வீர் கண்ணைப் பூவென்றும் சொல்வீர் மீண்டும்
தயவில்லாக் கண்கள் என்றும் தாங்கியே நிற்பீர் இங்கோ
இயங்கிடும் குளத்தின் கண்கள் எப்போதும் ஓடி ஓடி
இளைப்பாறல் இன்றிச் சுற்றும் எழிலினைப் பாரும் என்றாள்
மயங்கிய பெண்ணாள் மீன்கள் குளங்களின் கண்கள் என்றாள்
மனம் போல ஓடும் கண்கள் என்றாங்கு மயங்கி நின்றாள்


கம்பன்
பண் உளர் பவளத் தொண்டை பங்கயம் பூத்தது அன்ன
வண்ண வாய் ,குவளை வாள் கண் மருங்கு இலாக் கரும்பின் அன்னார்
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர்த் தடங்கட்கெல்லாம்
கண் உள ஆம் கொல் என்று கணவரை வினவுவாரும்

0 மறுமொழிகள்: