Friday, June 27, 2008

குறட் கருத்து காமத்துப்பால்

உறங்கென்று கண்களிடம் இரந்து நின்றேன்
உறங்கவில்லை மீன்கள் போல புரளுதிங்கு
வரங் கொண்டு வந்த எந்தம் காதலரின்
வரவின்றிச் செய்வதிந்தக் கண்கள் ரெண்டும்
தினம் கொஞ்ச நேரம் மட்டும் உறங்கி விட்டால்
தேடி அவர் கனவினிலே வந்திடுவார்
இனம் இங்கே உயிரோடு இருப்பதனை
எடுத்துரைப்பேன் உதவியில்லை கண்கள் தம்மால்


குறள்

கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன் மன்.

0 மறுமொழிகள்: