Saturday, June 28, 2008

பழம் பாடல் கம்பன்

இடையது முறியும் என்றே இருக்கின்றார் எல்லாம் காண
இதழதன் சிவப்பில் ஊரார் இரத்தத்தின் துடிப்பு ஏற
படையெனும் மார்பும் நஞ்சின் வேலைப் போல் கண்கள் ரெண்டும்
தடையின்றி வளர்ந்த கூந்தல் தரையினைத் தழுவி நிற்க
குடிக்கின்றாள் பெண்ணாள் மதுக் கோப்பையைக் கையில் ஏந்தி
கோப்பைக்குள் தன்னைக் கண்டாள் கோபத்தின் உச்சி கண்டாள்
அடிப் போடி எச்சில் உண்ணும் பைத்தியம் அங்கே போய் நீ
அளவின்றிக் குடிக்கலாம் என்றவளையே விரட்டுகின்றாள்

கம்பன்

அச்ச நுண் மருங்குலாள் ஒர்
அணங்கு அனாள் அளக பந்தி
நச்சு வேல் கருங்கண் செவ்வாய்
நளிர் முகம் மதுவுள் தோன்ற
பிச்சி நீ என் செய்தாய் இப்
பெரு நறவு இருக்க, வாளா
எச்சிலை நுகர்தியோ என்று
எயிற்று அரும்பு இலங்க நக்காள்

0 மறுமொழிகள்: