Thursday, June 26, 2008

பழம் பாடல் கம்பன்

கள்ளொன்று கள்ளை உண்டு களித்தது அதனால் அவளின்
கண்களில் கள்ளே வந்து களியாட்டம் போட்டதங்கு
வெள்ளமாம் கள்ளை நல்ல விளிம்பிலே ததும்பக் கொண்டாள்
வியப்புடன் காணுகின்றாள் வெண்ணிலா கள்ளுக்குள்ளே
துள்ளியே பெண்ணாள் நிலவைத் துயரத்தை விடுக எனறாள்
துரத்திடும் பாம்புக்கஞ்சி கள்ளுக்குள் வந்தாயோ நீ
வெள்ளையே நிலவே வேண்டாம் கவலைகள் அஞ்சேல் என்றாள்
கள்ளினால் விளையும் இந்தக் காட்சியைக் கம்பன் தந்தான்

கம்பன்

களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஒர் கனங்குழை,கள்ளின் உள்ளாள்
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி
அளித்தனன் அபயம் வானத்து அரவினை அஞ்சி வந்து
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள்

0 மறுமொழிகள்: