Sunday, June 22, 2008

நமக்குள்ளே மகிழ்ந்திடுவார்

வயிறாரச் சோறிடுங்கள் ஏழையர்க்கு
வாழ்த்தும் அவர் முக மலர்ச்சி பார்த்திடுங்கள்
உயிராரை வாழ வைக்கும் உணவு எல்லாம்
உடன் இறைவன் தனைச் சேரும் மகிழ்ந்திடுவார்
அயலார்க்கும் அன்பு செய்து அணைத்திடுங்கள்
ஆண்டவரைச் சென்றடையும் அந்த அன்பு
முயல்வீரே அன்பு ஒன்றே பண்பு என்று
முதல்வன் இறை நமக்குள்ளே மகிழ்ந்திடுவார்

0 மறுமொழிகள்: