Friday, June 13, 2008

வாழ்வதனால்

           இல்லாத  பொருட்களுக்காய்   ஆசை கொண்டு

                     எங்கெங்கோ அலைகின்றோம்  தேடுகின்றோம்

          நல்லாரோ  இருப்பதிலே  நிறைவு   கொண்டு

                     நலமாக  வாழுகின்றார்  சிக்கல்  இன்றி

         இல்லாரோ  வழியின்றி  உம்மைப்     பார்த்து

                    ஏக்கங்கள்  கொளளு்கின்றார் புரியாராகி

         நல்லாரோ சிரிக்கின்றார்    எல்லாம்  பார்த்து

                    நாட்டமின்றித்   தேட்டமின்றி  வாழ்வதனால்

0 மறுமொழிகள்: