Friday, June 13, 2008

குறட் கருத்து

            துன்பம்  ஆடும்  ஆட்டத்திற்  களவேயில்லை

                     துடிக்க  வைத்துப்  பார்க்கின்றது  பலரை  இங்கு

           இன்பம்  கொண்டு  ஆடுகின்ற  ததுவோ  எங்கும்

                    எக்காளம்  பாடி  பலர்  தன்னை  ஒய்த்து

          தன் பிடியில்  மனிதர்  படும்  பாட்டில் அது

                    தருக்குவதும்   நெருக்குவதும்  அய்யோ  அய்யோ

          வன்ம  மது  கொண்டாற் போல்  மனிதர்களை

                   வதைப்பதிலே  தன்  பெருமை  காக்கின்றது

         2. என்ன  செய்ய  துன்பமது  துன்பம்  கொண்டு

                   இடி பாடு  கொள்ளுகின்ற  இடங்கள் உண்டு

          தன்னலமே யில்லாமல்  பிறருக்காகத்

                   தான் உழைக்கும்  பெரியோரின்  வீட்டிற்குள்ளே

          எந்த வித  ஆசைகளும்  இல்லாராகி

                   இருப்பதிலே  நிறைவு கொள்வார்  தம்மிடத்தில்

          வந்த துன்பம்  செயலற்று  வதையும் பட்டு

                   வாய்  திறந்து  அது  அழுமாம்  துன்பம்  கொண்டு

                                         திருக்குறள்

          இடும்பைக்கே  இடும்பை  படுப்பர் இடும்பைக்கு

          இடும்பை  படாஅ தவர்

                   

               

           

0 மறுமொழிகள்: