Saturday, June 28, 2008

வணங்கியவர் காமராஜர்

ஆங்கிலத்தைத் தெரிந்தவர்தான் இந்தியெனும்
அம்மொழியும் தெரிந்தவர்தான் இந்தியத் தாய்
ஈன்றெடுத்த எம்மொழியும் தெரிந்தவர்தான்
இருந்தாலும் எழுந்து நின்று ஆட மாட்டார்
சான்றாண்மை கொண்டவராய் வாழ்ந்ததாலே
சரித்திரத்தின் உண்மையெல்லாம் தெரிந்ததாலே
ஈன்றாளின் மொழி ஒன்றே எங்கும் பேசி
எம் தமிழை வணங்கியவர் காமராஜர்

1 மறுமொழிகள்:

said...

இருந்தகளம் எதுவாயினும் ஈன்றாள்மொழி பேசியவர்

பிறந்தமண்ணின் பெருமையினைப்
பாரெங்கும் காட்டியவர்

உருசிய நாட்டினுக்கும் தமிழுடையில்
சென்றவரிவர்

தமிழுக்கே மாதிரியாய் தமிழகத்தில் வாழ்ந்தானே!