Monday, June 23, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

உலகெங்கும் ஆண்களும் பெண்களும் வாழ்கின்றார்
உண்மையில் வாழ்கின்றாரா
சிலர் மட்டும் வாழ்கின்றார் பலர் வாழவில்லையாம்
சிறப்பான செய்தி ஒன்றை
மலர் கொண்டு சொல்கிறார் மனம் கொண்ட வள்ளுவர்
மனத்திலே கொள்ள வேண்டும்
பலர் வாழ்வின் உண்மையைப் பளிச்செனச் சொல்கிறார்
பாடமாய்க் கொள்ள வேண்டும்

உடல் என்ற ஒன்றினை உணர்வோடு உள்ளதாய்
உணர்ந்தார்கள் வாழுகின்றார்
உளம் கொண்ட மங்கையர் உடல் வேண்டி நிற்பதை
உணராதார் வீழுகின்றார்
கடல் போன்ற காமத்தின் ஒரு துளி காணாதார்
கடல் போல அதிகம் உள்ளார்
கண்டவர் மிகச் சிலர் மிகச் சிலர் அவர் மட்டும்
காதலால் வெல்லுகின்றார்


குறள்

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார்

0 மறுமொழிகள்: