Monday, June 9, 2008

காந்தியடிகளும் சீடரும்

                  இங்கிலாந்து சென்றிருந்த  காந்தியாரை
                          எல்லோரும்  சந்திக்க   விரும்புகின்றார்
                  அங்கவரில்  நகைச்சுவையின்  அரசரென்னும
                          அறிஞர் சார்லி  சாப்ளினும்  ஒருவராவார்
                   இங்கிதனை அடிகளிடம்  நண்பர் சொன்னார்
                          யார்  அந்தச் சாப்ளின் என்றடிகள் கேட்டார்
                   தம் கடமை தனை  மட்டும் உணர்ந்து நின்றார்
                           தானறியார் திரைப் படத்துப்  பெரியார் தன்னை


                   இங்கிதைப்  போல்  ஒரு  செய்தி  தமிழகத்தில்
                           என்.எஸ்.கே.என்னும்  நந்தம்  கலைவாணர்தாம்
                   தம் குடும்ப விழாவிற்காய்   சிவாஜியுடன்
                            தமிழ்க்  கண்ணதாசனையும்  அழைத்திருந்தார்
                   பொங்கு தமிழ்க் கவிமணியாம்  காந்தி  அன்பர்
                            பொறுமைமிகு தேசிக  வினாயகத்தை
                    இங்கிவரும்  காணுதற்கு விழைந்ததாலே
                             இருவரையும்  அவரிடத்தில்  அழைத்துச் சென்றார


                    கவிஞர்  இவர்  கண்ணதாசன்  என்று  சொல்ல
                             கவிமணியார் உளம் கொண்டு  வாழ்த்தி நின்றார்
                    இனிய தம்பி  சிவா  ஜி  கணேசன்  இவர்
                             என்று  சொல்ல  கவிமணியார்   மெல்லக் கேட்டார்
                    சரி  இவர்கள்  செய்யும்  தொழில்  என்ன  என்றார்
                             சட்டென்று  கலைவாணர்  சிரித்துச் சொன்னார்
                    திரைப் படமே  பார்த்ததில்லை பாட்டையாவும்
                             தெரியவில்லை  சிவாஜியை  விளக்கம் சொன்னார்
                          

0 மறுமொழிகள்: