Monday, June 30, 2008

குறட் கருத்து காமத்துப்பால்

மறைத்து விட முடிகிறதா இந்தக் காதல்
மனத்திற்குள் கிடக்கிறதா அந்தோ அந்தோ
இறைத்து விட்ட நீர் போல ஊரார்க் கெல்லாம்
எப்படித் தான் தெரிந்ததுவோ புரியவில்லை
உரைத்திடலாம் அவருக்கென் துன்பம் என்றால்
உடன் பிறந்த நாணம் அதோ தடுக்கிறது
தரத் தந்தான் நோயிதனை அவனே யன்றோ
தானாகத் தழுவி இதைத் தீர்க்க வேண்டும்

குறள்
கரத்தலும் ஆற்றேன் இந்நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

0 மறுமொழிகள்: