Thursday, June 12, 2008

இவரைக்கடி

                  கல்வி கற்கக்  குழந்தைகளை  அனுப்புகின்றார்
                       கண்ணீராய்க்  கரைகின்றேன்  அவர் குறித்து
                  நல் விதமாய்க்  கற்க  வைக்கும்  ஆசையிலே தான்
                       நாடெங்கும்  அனுப்புகின்றார்  தவறேயில்லை
                 புல்லி  அநதத்  தாய் மடியில்  சீலைக்குள்ளே
                       பொதிந்தன்பு  கண்டவராய்  வளரும்  பிள்ளை
                 கிள்ளி அதை  எறிகின்றார்  கல்விக்கென்று
                        கிறுக்காகும்  அப்பிள்ளை மேதையாமோ


                 படி படி  என்றே   அவரைப்  படுத்துகின்றார்
                         பாசமதே  இல்லாமல் துரத்துகின்றார்
                 துடி  துடி  என்றே  பிள்ளை  துடிக்கின்றது
                         தூங்கும் வரைப் படிப்பிற்காய்  நடிக்கின்றது
                 அடி அடியென்றே சில  பேர் அடித்தொழிப்பார்
                          அவர்க்கு வந்து பிறந்த பிள்ளை மனம்  ஒடிப்பார்
                  வடி  வடி நீயும்  இங்கே  கண்ணீர்  வடி
                           வருங்காலச் சந்ததிக்காய்  இவரைக் கடி

0 மறுமொழிகள்: